பட்டினிச் சாவை தடுத்திட மனம் இல்லை நம்மிடம்
Thursday, December 20, 2007
கண்ணீர்
பட்டினிச் சாவை தடுத்திட மனம் இல்லை நம்மிடம்
Posted by
காஞ்சி பையன்
at
12:13 AM
2
comments
Monday, December 17, 2007
கேள்வி பிறந்தது அன்று நல்ல பதிலும் கிடைத்தது இன்று
இதே நாள் 1903 ஆண்டு- ரைட் சகோதரர்கள் வடக்கு கரோலினாவில் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் (அதாங்க பிளைட்) பறந்தனர். நன்றி: விக்கிபீடியா
Posted by
காஞ்சி பையன்
at
6:01 AM
1 comments
Thursday, December 13, 2007
என்னை கவர்ந்த நிகழ்வுகள்
விவேகானந்தர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி
அறிவியல் புரட்சியால் உலகை திரும்பி பார்க்கவைத்த அமெரிக்காவை , இந்தியாவின் பக்கம் திரும்ப செய்ததில் பெரும்பங்கு விவேகானந்தரை சாரும் .
அமெரிக்காவில் பல இடங்களில் அவர் சொர்பொழிவு செய்தார் , அவ்வாரு ஒரு இடத்தில் சொர்பொழிவு முடித்துவிட்டு , மக்களிடம் சகஜமாக பேசிக்கொண்டு இருந்தார் .
அப்பொழுது ஒரு பெண்மனி , அவரிடம் " நீங்கள் என்னை கல்யாணம் செய்து கொள்விற்களா" என்று கேட்டாள்.ஒரு நிமிடம் விவேகானந்தர் அதிர்ந்துவிட்டார் , பொதுவாக அமெரிக்கர்கள் வெளிபடையானவர்கள்.
விவேகானந்தர் அப் பெண்மனியை பார்த்து கேட்டார்" என்னிடம் உள்ள எது , உங்களை அவ்வாறு கேட்க தூண்டியது ? ,ஏன் எனில் நான் அதை திருத்தி கொள்ளவேண்டும்" என்றார்

அதற்கு அப்பெண்மனி சொன்னாள் " உங்களின் அறிவு திறன் [ Your Intelligent ] ஆகையால் உங்களை நான் திருமணம் செய்துகொண்டால் , உங்களை போல அறிவுள்ள குழந்தை பெற்று கொள்ளவே நான் கேட்கிறேன்"என்றாள் .
அதற்க்கு விவேகானந்தர் சிரித்துகொன்டே கூறினார் " அம்மா அதற்க்கு நீங்கள் 1 வருடம் காத்திருக்க வேண்டும் அதுமட்டும்மில்லை அறிவுள்ள பிள்ளைக்கும் உத்திரவாதம் இல்லை, ஆகையால் என்னையே உங்கள் மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்
குறிப்பு: மக்களே, நமக்கு நம் முன்னோர்கள் விட்டுசென்றுள்ள பெருமைகளை பார்திர்களா ! .
Posted by
காஞ்சி பையன்
at
10:10 PM
3
comments
Wednesday, December 12, 2007
Sunday, December 9, 2007
Thursday, December 6, 2007
தங்கை
என் கைப்பிடித்து நடை பழகியவள் ,
ஆனாலும் என்னை படிப்பில் முந்தியவள்,
அப்பா சைக்கில்ளை ஓட்ட முற்பட்டு விழுந்தபோது
முதலில் இதை ஓட்டு என்று 3 சக்கர சைக்கிளை என் அருகே நிறுத்தினாய் ,
அதற்காக தெரு தெருவாக உன்னை விரட்டினேன்
உன் வகுப்பு தோழன் , உன் ஜடையை பிடித்து இழுக்க
அவனுடைய வேண்டுதல் குடிமியை வெட்டி ,
கணக்கு வாத்தியார் அடிப்பின்ன,
நீ வீட்டுக்கு ஓடிய ஓட்டம் ,
என் கல்லூரி கதைகளை பகிர்ந்து
கொண்ட நல்ல தோழி ஆனாய்.
எங்கள் வீட்டு சிறு பெண்
இன்று அடுத்த வீட்டு தலைவி ஆகிறாய்
எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கினாய்
சொல்லிவிட்டு கிளம்பினாய்
என்னிடம் மட்டும் சொல்லாமல்
எல்லோரும் என்னை பார்க்க
நான் உன்னை பார்க்க ,
என் கண்ணில் இருந்து மறந்தாய்
நம் வீட்டுக்கு வந்து ,
உன் அறையில் படுத்து அழ ஆரம்பித்தேன் ,
என் செல் சிணுங்க ,
எடுத்தேன் உன் அழுகை கேட்டு கொண்டே இருக்கிறது.
குறிப்பு : மக்களே சத்தியமா இது கவிதை இல்ல , ஆனா கவிதை மாதிரி
Posted by
காஞ்சி பையன்
at
1:26 AM
11
comments
Wednesday, December 5, 2007
தருமியின் கேள்வி

Posted by
காஞ்சி பையன்
at
11:17 PM
2
comments
Tuesday, December 4, 2007
காஞ்சியை பற்றி
அன்பான வலைப்பூ மக்களுக்கு ,
நான் பிறந்து வளர்ந்த காஞ்சியை பற்றி சில வரிகள் குறிப்பிட விரும்புகிறேன் ,காஞ்சிபுரம் , கோவில்களுக்கும், பட்டுக்கும், மற்றும் சங்கர மடத்திற்கும் பெயர் பெற்றது .
ஏகாம்பரநாதர்
பொதுவாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏகாம்பரநாதர் , காமாட்சி அம்மன் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்களுக்கு மட்டுமே செல்கின்றனர் . ஆனால் அது தவிர பல சிறப்புமிக்க கோவில்கள் உள்ளன .
காமாட்சி அம்மன்
10 வருடங்களுக்கு முன் காஞ்சி பட்டுக்கு மிகுந்த தேவை இருந்தது , ஆனால் இப்பொழுது அதிக போலி , நெசவாளர்களுக்கு நியாவிலை கிடைக்காமை மற்றும் தரகர்களாலும் மிகுந்த ஏமாற்றம் அடைந்த மக்கள் காஞ்சி பட்டு பக்கம் அதிகம் செல்லாமல் இருக்கின்றனர்.
வரதராஜ பெருமாள்
காஞ்சி பெரியவர்கள்
Posted by
காஞ்சி பையன்
at
10:32 PM
0
comments
இனிதே ஆரம்பம்
வணக்கம் மக்களே ,
Posted by
காஞ்சி பையன்
at
4:30 AM
3
comments



